தேடுதல்

திருத்தந்தையின் டுவிட்டர் பக்கம் திருத்தந்தையின் டுவிட்டர் பக்கம் 

கடவுளால் நாம் அன்பு கூரப்படுகிறோம் என்பது வாழ்வின் உண்மை

நாம் இவ்வுலகில் எந்த அளவு பயனுள்ளவர்களாக இருக்கிறோமோ அதை வைத்துத்தான் நாம் மதிப்பிடப்படுகிறோம் என்பதை நம் உள்ளத்தில் ஆழமாக பதிய வைக்க இவ்வுலகம் முயற்சிக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடவுளால் நாம் அன்பு கூரப்படுகிறோம் என்ற வாழ்வின் உண்மையை நமக்கு நற்செய்தி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது என தன் டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் இவ்வுலகில் எந்த அளவு பயனுள்ளவர்களாக இருக்கிறோமோ  அதை வைத்துத்தான் நாம் மதிப்பிடப்படுகிறோம் என்பதை நம் உள்ளத்தில் ஆழமாக பதிய வைக்க இவ்வுலகம் முயற்சித்துவரும் வேளையில், நாம் கடவுளால் அன்புகூரப்படுகிறோம் என்ற வாழ்வின் உண்மையை நமக்கு நற்செய்தி நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2012ஆம் ஆண்டு திருத்தந்தையருக்குரிய டுவிட்டர் பக்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அதன் ஆங்கிலப் பிரிவு பக்கத்தில் இதுவரை 5600க்கும் மேற்பட்ட டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தை இதுவரை 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2024, 17:15