தேடுதல்

Zayed விருது குழு Zayed விருது குழு 

மனித உடன்பிறந்தநிலை Zayed விருது பற்றி...

மனித உடன்பிறந்த உணர்வு பற்றிய ஏடு, மக்கள் மத்தியில் அமைதிப் பாதையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சி - கர்தினால் செர்னி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித உடன்பிறந்தநிலை Zayed விருதுக்கு 2021ம் ஆண்டில் தெரிவுசெய்யப்படும் நபர் அல்லது நிறுவனம் குறித்து, அக்டோபர் 08, இவ்வெள்ளியன்று, அவ்விருது வழங்கும் குழு செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கியது. 

காழ்ப்புணர்வை விதைப்பவர்களுக்கு எதிராக துணிச்சலோடு நடவடிக்கை எடுப்பவர் மற்றும் அந்நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பவர், அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வின் அடிப்படையில் அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்குவிப்பவர், மனித முன்னேற்றத்திற்கு மிகுந்த அளவில் பங்களிப்பவர் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு செயல்படும் தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்றும் அக்குழு கூறியது.

இவ்விருது வழங்கும் குழுவில் ஒருவரான, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் தலைவரான கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் விளக்கும்போது, மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏடு, மக்கள் மத்தியில் அமைதிப் பாதையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சி என்று கூறினார்.

இந்த ஏட்டை, மத நம்பிக்கையாளர்கள் எவ்விதம் ஏற்று செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்தே இதன் நீண்டகாலப் பலன்கள் உள்ளன என்றும், இப்பூமியில் வாழ்கின்ற அனைவருமே நம்பிக்கையாளர்களே, சிலர் நம்பிக்கையாளர் என்றும், மற்றவர்கள் மத நம்பிக்கையற்றவர் என்றும் பிரித்து அழைப்பது தவறு என்றும், கர்தினால் செர்னி அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2021, 15:57