தேடுதல்

C9 கர்தினால்கள் கூட்டம் - 180624 C9 கர்தினால்கள் கூட்டம் - 180624  (Vatican Media)

C9 என்ற கர்தினால்கள் அவைக் கூட்டம் வத்திக்கானில்

திருஅவை நிர்வாகத்திலும், தலைமை அலுவலகங்களிலும் சீர்திருத்தங்களைக் கொணர, 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உருவாக்கப்பட்டது C9 கர்தினால்கள் அவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவை நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C9 என்ற கர்தினால்கள் அவை இம்மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் வத்திக்கானில் திருத்தந்தையின் தலைமையில் கூடி விவாதித்தது.

2024ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக இடம்பெறும் இக்கூட்டம், இதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் வத்திக்கானில் இடம்பெற்று, Praedicate Evangelium என்ற அப்போஸ்தலிக்க ஏடு குறித்து விவாதித்ததுடன், உலகில் மத்தியக்கிழக்குப் பகுதி மற்றும் உக்ரைனில் இடம்பெறும் மோதல்களுக்கான அமைதி வழிகள் குறித்தும் கலந்தாலோசித்தது.

ஏனைய அண்மை கூட்டத்தில் திருஅவையில் பெண்களின் பங்கு குறித்து விவாதித்ததுடன், அருள்சகோதரி ரெஜினா த கோஸ்தா பெத்ரோ மற்றும் பேராசிரியை ஸ்டெல்லா மோரா அவர்களின் சிந்தனைப் பகிர்வுகளுக்கும் செவிமடுத்தது.

திருஅவையை நிர்வகிப்பதிலும், உரோமிலுள்ள தலைமை அலுவலகங்களிலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்ற அதே 2013ஆம் ஆண்டில் செப்டம்பர் 28ஆம் தேதி உருவாக்கப்பட்ட C9 அவை, அக்டோபர் முதல் தேதி தன் முதல் கூட்டத்தை நடத்தியது.

தற்போதைய C9  கூட்டத்தில் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், வத்திக்கான் நகர நிர்வாக அவைத் தலைவர் கர்தினால் Fernando Vérgez Alzaga, கின்ஷாசா கர்தினால் Fridolin Ambongo Besungu, மும்பை கர்தினால் Oswald Gracias, பாஸ்டன் கர்தினால் Seán Patrick O'Malley, பர்சலோனா கர்தினால் Juan José Omella Omella, கியூபெக் கர்தினால் Gérald Lacroix, லக்ஸம்பர்க் கர்தினால் Jean-Claude Hollerich,  பிரேசில் நாட்டின் San Salvador de Bahia கர்தினால்  Sérgio da Rocha ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த C9 அவையின் செயலராக ஆயர் Marco Mellino அவர்கள் உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2024, 14:33