இனியது இயற்கை –தண்ணீரை அருந்துவதில் மிகவும் கவனமாக இருப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம்முடைய உடல் அமைப்பின் இயக்கம் சீராக இருப்பதற்குத் தண்ணீர் மிக அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேவேளையில், அதனை முறையாக அருந்தக் கற்றுக்கொள்ளவேண்டும். முதலாவதாக, தண்ணீரை வேகமாகக் குடிக்கக் கூடாது. அப்படி தண்ணீரை வேகமாகக் குடிக்கும்போது, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் பகுதியிலுள்ள அழுக்குகள் வெளியேறாமல் அப்படியே கீழ்நோக்கிப் படிந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது செரிமானக் கோளாறுகளை உருவாக்கிவிடும். இரண்டாவதாக, தண்ணீரை நின்றுகொண்டு குடிக்கக் கூடாது. அது மிகவும் தவறான முறை. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் உட்கார்ந்த நிலையில்தான் நாம் தண்ணீரைக் குடிக்கவேண்டும். ஏனென்றால், தண்ணீர் குடிக்கும்போது வாயிலிருந்து குடல் வரைக்கும் உள்ள நரம்புகளில் அதிர்வுகள் ஏற்படும். இதனால் தண்ணீரை நின்றுகொண்டு குடிக்கும்போது ஹார்மோன் சமநிலை ஏற்பட்டு செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
மூன்றாவதாக, அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரைக் குடிக்கக் கூடாது. தண்ணீர் குடி்பபது உடலுக்கு நல்லதுதான். அதேவேளையில், தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் ஹைப்போ நெட்மீரியா என்னும் நோய் ஏற்படும். இது ஒரு போதை நிலை போன்றது. தாகமே இல்லாவிட்டாலும் கூட, தண்ணீர் குடிக்கவேண்டும் என்று தோன்றும். நான்காவதாக, சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. காரணம், சாப்பிடும் முன் தண்ணீர் குடித்து வயிறை நிரப்பிக் கொண்டால், சாப்பிடும்போது உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் பெற முடியாமல் போய்விடும். இதனால் உடல்நலத்திற்குக் கேடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்