தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
காங்கோ சிறார் காங்கோ சிறார்   (AFP or licensors)

ஆதரவற்ற குழந்தைகளின் மன அழுத்தம் மிகப்பெரியது

மினோவா மற்றும் உவிராவில் உள்ள இடம்பெயர்ந்தோர் தளங்கள் மற்றும் நலவாழ்வு மண்டலங்களில் உள்ளோர் இந்த காலரா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால், கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்தவர்களும், எல்லாவற்றையும் இழந்த ஆதரவற்றவர்களுமானக் குழந்தைகளின் மன அழுத்தம் மிகப்பெரியது என்றும், ஒவ்வொரு நாளும் உறுதியான மனிதாபிமான பதிலின்றி அவர்களின் துயரம் மோசமடைந்து வருகின்றது என்றும் கூறினார் யுனிசெஃப் பிரதிநிதி ஜீன் பிரான்சுவா பாஸ்.

மார்ச் 15 சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இதற்கு முன் இல்லாத பாதுகாப்பு நெருக்கடியைக் குழந்தைகள் எதிர்கொள்வதாகவும், குழந்தைகள் போர் இலக்குகளாகப் பயன்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறார்கள் என்றும், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, ஆள்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்தார் காங்கோ ஜனநாயகக் குடியரசின் யுனிசெஃப் பிரதிநிதி ஜீன் பிரான்சுவா பாஸ்.

மோதல்களால் மனிதாபிமான நடவடிக்கைகள் அதிகளவில் குறைந்துள்ளன என்றும், புக்காவுக்கு வடக்கே 25 கி.மீ தொலைவில் உள்ள கவுமு விமான நிலையம் மற்றும் வங்கிகள் மூடப்பட்டதால் கள நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு பணம் செலுத்துதல் மற்றும் விநியோகம் தாமதமாகி விட்டன, அடிப்படை உதவிகளை விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது என்றும் தெரிவித்தார் பாஸ்.

மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவ உதவிப் பொருள்கள் ஆகியவற்றின் பற்றாக்குறையால், காலரா, தட்டம்மை போன்ற நோய்கள் பரவி வருகின்றன என்றும், 15க்கும் மேற்பட்ட நலவாழ்வு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த பாஸ் அவர்கள், 2025 ஜனவரி முதல், பிப்ரவரி மாத இறுதி வரை, ஏறக்குறைய 146 புதிய நோய்த்தொற்று அதிகரிப்புக்களும் 377 காலரா வழக்குகளும் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

மினோவா மற்றும் உவிராவில் உள்ள இடம்பெயர்ந்தோர் தளங்கள் மற்றும் நலவாழ்வு மண்டலங்களில் உள்ளோர் இந்த காலரா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால், கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் பாஸ்.

3,00,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி சீர்குலைந்துள்ளன என்று எடுத்துரைத்த  பாஸ் அவர்கள், புக்காவுவில் மட்டும், 19 பள்ளிகள் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான தற்காலிக தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும், இது கல்வி மற்றும் மனிதாபிமான தேவைகளை ஆதரிக்க மாற்று தீர்வுகளுக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் வலியுறுத்தினார்.

இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக, UNICEF தூய்மையான நீர் மற்றும் நலவாழ்விற்கான அணுகலை மேம்படுத்தி வருகிறது என்றும், மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒரு நாளைக்கு 1,80,000 லிட்டர் தூய்மையான நீரை வழங்குகின்றன என்றும் தெரிவித்த பாஸ் அவர்கள், காலரா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நீக்கம், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவ வருகைகளுக்காக UNICEF நடமாடும் குழுக்கள் பணியாற்றி வருகின்றன என்றும் தெரிவித்தார்.

பள்ளிகளை மீண்டும் திறக்கவும், சேதமடைந்த கட்டமைப்புகளை விரைவான மறுவாழ்வுக்காக மதிப்பிடவும் யுனிசெஃப் பணியாற்றி வருகின்றது என்றும், பெரியம்மை மற்றும் காலரா வெடிப்புகளை நிவர்த்தி செய்ய, குறிப்பாக மருத்துவ பராமரிப்பு, ஊட்டச்சத்து உதவி மற்றும் மனநல ஆதரவு வழியாக நலவாழ்வு மையங்களுக்கு UNICEF ஆதரவை வலுப்படுத்துகிறது என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 மார்ச் 2025, 15:50
Prev
March 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Next
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930