தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

அனைத்து நாடுகளுக்காகவும் அன்னை மரியாவிடம் செபிப்போம்!

திருஅவைக்காகவும், அனைத்து நாடுகளுக்காகவும், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கின் அமைதிக்காகவும் இந்த மே மாதத்தில் அன்னை மரியாவிடம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்த மே மாதத்தில், நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப விடயங்களையும், போரில் பலியாவோரின் துயரங்களையும் புனித கன்னி மரியாவிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வோமென விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

மே 2, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்காகவும், அனைத்து நாடுகளுக்காகவும், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கின் அமைதிக்காகவும் அன்னை மரியாவிடம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2024, 15:15